தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் இன்று பதவியேற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் இன்று பதவியேற்றனர்.
தேர்தலை நடத்தும் பொறுப்புள்ள ஆணையம், போட்டி இடுவோரை சார்ந்து இருந்தால், அதன் செயல் முறையில் நடுநிலையை உறுதி செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.
2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.8% இல் இருந்து 6%ஆக குறைத்துள்ளது மூடிஸ் நிறுவனம்.
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்க ரஷ்யா முன்வந்துள்ளது.
எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதனை ஒன்றிய அரசு தாக்கல் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும், இந்த மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.