அரசுப் பள்ளிக்கு பூட்டு: வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீப் சிறைபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கெட்டூர் கிராமத்தில் தற்காலிக பள்ளி கட்டடம் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலரின் ஜீப்பை சிறைபிடித்த பெற்றோர்கள், புதிய பள்ளி கட்டடம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



















