சிவகாசி அருகே தலித் இளைஞர் மீது சாதி ஆதிக்க சக்தியினர் கொடூரத் தாக்குதல்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்
விருதுநகர், மே 16 - விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தலித் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்கு தலுக்கு உள்ளான இளைஞர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னணியின் விருதுநகர் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.முருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்திற்கு உட்பட்டது பி.பாறைப்பட்டி கிராமம். இங்குள்ள அசைபா காலனியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செ.தவமணி- த.மகேஸ்வரி தம்பதியர் வசித்து வருகின்ற னர். இவர்களது மகன் சதீஷ்பாண்டி, கட்டு மானத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 11 அன்று சதீஷ்பாண்டியும், அவரது நண்பர் ராமரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த னர். அய்யம்பட்டி திருமண மண்டப வளைவில் வந்தபோது, எதிரே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் நத்தம்பட்டியைச் சேர்ந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மோதுவது போல் வந்ததோடு, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். எனவே, மனோஜ்குமாரிடம் வளைவில் இவ்வளவு வேகமாக வரலாமா என சதீஷ்பாண்டி கேட்டுள்ளார். இதையடுத்து, “நீங்கள் எந்த ஊரு” என கீழே விழுந்தவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ்பாண்டி, பி.பாறைப்பட்டி எனக் கூறிய வுடன், சாதியைச் சொல்லி இழிவாக திட்டிய தோடு, சதீஷ்பாண்டியை, மனோஜ்குமார் உள்ளிட்டோர் கொடூரமாகத் தாக்கியுள்ள னர். மேலும் செல்போன் மூலம் தகவல் தெரி வித்து ஊரிலிருந்து பலரை வரவழைத்து தாக்குதல் நடத்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன சதீஷ்பாண்டி, தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விப ரங்களை கூறவில்லை. இந்நிலையில், மே 12 அன்று சதீஷ்பாண்டி இரத்த வாந்தி எடுத்துள்ளார். மேலும் உடம்பெல்லாம் வலிக்குது என தெரிவித்துள்ளார். அப்போது பெற்றோர் கேட்கவே நடந்தவற்றை கூறி யுள்ளார். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் சதீஷ்பாண்டி சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தவமணி மே 13 அன்று எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கைது செய்யாத காவல்துறை விசாரணை செய்த எம்.புதுப்பட்டி காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நத்தம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் மனோஜ்குமார் மற்றும் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை. ஆனால், சதீஷ்பாண்டி, இராமர் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளின் கீழ் எம்.புதுப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிகிச்சையில் உள்ள சதீஷ்பாண்டி யிடம், “நீ சொல்றதெல்லாம் உண்மை கிடை யாது. ஓடி விடு, இல்லையென்றால் உன் மீது கஞ்சா கேஸ் போட்டு விடுவோம்” என 3 போலீசார் மிரட்டியுள்ளனர். எனவே, சதீஷ் பாண்டி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய 9 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட சதீஷ்பாண்டி உட்பட மூவர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல் பட்ட எம்.புதுப்பட்டி போலீசார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை விரை வாக முடித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.