சீனாவில் கொசு அளவில் டிரோன் : ராணுவ தொழில்நுட்ப வளர்ச்சி
சீனாவில் வெறும் 6 மில்லி மீட்டர் அளவிற்கு கொசு அளவிற்கு டிரோன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் (NUDT) அதிநவீன ராணுவத் தொழில்நுட்பம் மூலமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் பற்றிய தகவல்களை சீனாவின் ராணுவ தொலைக்காட்சியான சிசிடிவி-7 (CCTV 7) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன் மூலம் சைபர் மற்றும் பிற குற்றங்களின் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் அரசு பயங்கரவாதம்: 16 பேர் சுட்டுக் கொலை
கென்யாவில் அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சுமார் 16 பேரை படுகொலை செய்துள்ளது அந்நாட்டு அரசு. நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்துடன் அந்நாட்டு அரசு ஏற்படுத்திய ஒப்பந்தத்திற்கு எதிராக கடந்த ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அத்தினத்தை குறிக்கும் வகையில் அரசின் அடக்கு முறைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை உருவாக்கியது.
‘உண்மையான பன்முகத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்’
உண்மையான பன்முகத்தன்மையை உறு தியாக நிலைநிறுத்த வேண்டும் என ஐ.நா அவைக்கான சீனாவின் நிரந்தர பிரதி நிதி ஃபூ காங் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா சாச னம் கையெழுத்தான 80 ஆவது ஆண்டு நிறை வையொட்டி நடந்த நிகழ்வில் ஐ.நா. பேசிய அவர், ஐ சர்வதேச சட்டத்தால் நிலைநிறுத்தப் பட்டுள்ள சர்வதேச ஒழுங்கு மற்றும் விதிகள் அடிப்ப டையில் உண்மையான பன்முக வர்த்தக அமைப்பை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும். சர்வதேச அமைப்பை நிலைநிறுத்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சரக்கு வர்த்தகம் சரியும்: வர்த்தக அமைப்பு எச்சரிக்கை
உலக வர்த்தக அமைப்பு வெளியிட்ட அறிக் கையில், 2025 இன் துவக்கத்தில் உலக ளாவிய சரக்கு வர்த்தகம் அதிகரித்துள்ளது. எனினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வர்த்தக வளர்ச்சி வலுவிழக்கும் என்றும் கணித்துள்ளது. உலகளாவிய சரக்கு வர்த்தகத்திற்கான ஒருங்கி ணைந்த முன்னணி குறியீடான சரக்கு வர்த்தக பாராமீட்டர் மதிப்புகளின் படி இதனை அறிவித் துள்ளது. மதிப்புகள் 100-க்கு மேல் இருந்தால், அதிக வர்த்தகம். 100-க்குக் கீழ் இருந்தால், சரக்கு வர்த்த கம் வழக்கத்தை விடக் குறைந்த அளவில் உள்ள துடன் எதிர்காலத்தில் குறையக்கூடும் என குறிக்கிறது.
உக்ரைன்-ரஷ்யா கைதிகள் பரிமாற்றம்
உக்ரைன்-ரஷ்யா கைதிகள் பரி மாற்றத்தை மேற்கொண்டுள்ளன. இந்தத் தகவலை உக்ரைனின் போர்க் கைதிகள் நலனுக்கான ஒருங்கிணைப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கைதிகள் பரிமாற்றத்தில், 25 வயதுக்குட்பட்ட வீரர்கள், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்டவர்களில் பலர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசுடமையாக்கப்பட்ட தங்கச் சுரங்கம் : மாலி மக்கள் கொண்டாட்டம்
பமாகோ, ஜூன் 27- மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கனடா நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்த தங்கச் சுரங்கத்தை அந்நாட்டு அரசு அரசுடமையாக்கி உள்ளது. இதனை அந்நாட்டு மக்கள் வர வேற்றுள்ளனர். இந்த நடவடிக்கை “அந்நாட்டின் பொரு ளாதார நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை” என மாலி அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராகவும், உலகவில் நான்கா வது நாடாகவும் மாலி உள்ளது. அந்நாட்டின் மிகப் பெரும் சுரங்கங்களில் ஒன்றான லூலோ-கூன் கோட்டோ வளாகம், இனி மாலி அரசின் தற்கா லிக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் என அந்நாட்டு இடைக்கால ராணுவ அரசு அறிவித்துள்ளது. கனடாவின் பாரிக் மைனிங் நிறுவனத்திற் கும், மாலி அரசுக்கும் இடையே நிலவி வந்த முரண்பாட்டின் உச்சகட்டமாக இந்த நடவடிக்கை மாறியுள்ளது. இந்த நடவடிக்கை சஹேல் கூட்டணி நாடுகளின் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான முனைப்பை காட்டுகிறது என பரவலாக பாராட்டப்படுகிறது.
கனடா நிறுவமான பாரிக் நிறுவனம் முறை யாக வரி செலுத்தாமல் மாலி அரசை ஏமாற்றி வந்தது. மேலும் கடந்த கால ஆட்சியில் இருந்த அரசுடன் இந்த நிறுவனம் ஏற்ப்படுத்திய ஒப் பந்தம் அந்த நிறுவனத்துக்கு மட்டும் சாதகமான ஒருதலைபட்சமானது எனவும் தற்போதைய அரசு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இத னடிப்படையில் அந்நாட்டு வணிக நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அந்த சுரங்கத்தை மாலி அரசு நாட்டுடமை ஆக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாரிக் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளது.
இந்தச் சுரங்கம் மட்டும் பாரிக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 14 சதவீதம் வரை பங்களிக்கிறது. மாலி அரசுக்கு அந்த சுரங்கத்தின் மீது வெறும் 20 சதவீத பங்கு மட்டுமே உண்டு. கடந்த மே மாதமே சுரங்க நிர்வாகத்தை மாற்றக் கோரி மாலி அரசு நீதிமன்றம் சென்றது. இந்த சுரங்கத்தை அரசுடமையாக்கிய ஜூன் 16 அன்றே ஆண்டுக்கு 200 டன் தங்கம் வரை சுத்தி கரிக்கும் திறன் கொண்ட அரசு தங்க சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை யும் ரஷ்யாவின் யாட்ரன் நிறுவனத்துடன் இணை ந்து மாலி துவங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கு மாலியிடம் இருக்கும் என அறிவிக்கப்படுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் தங்கத்தை மேற்குலக நாடுகளுக்கு குறைந்த விலைக்கு மூலப்பொருட்க ளாக மட்டும் அனுப்பும் நிலையை மாலி முடி வுக்கு கொண்டு வர உள்ளது. இந்த நடவடிக்கை மே ற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை கொடுத் துள்ளது.