நாடு முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமான போலி வங்கி கணக்குகள்
சிபிஐ தகவல்
நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நம்ப முடியாத அள வுக்கு மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், பல்வேறு வங்கி களில் திறக்கப்பட்டுள்ள ஏராளமான போலி வங்கிக் கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகி யுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ (மத்திய புலனாய்வுத்துறை) நடத்திய விசா ரணையின் முடிவில் நாடு முழுவதும் சுமார் 8.5 லட்சம் போலி வங்கிக் கணக்கு கள் திறக்கப்பட்டு, இவற்றின் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களது மோசடி பணத்தை பரிமாறியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த போலிக் கணக்குகள், மோசடி வழியாக திரட்டப்பட்ட பணத்தை பரி மாற்றம் செய்வதற்காக பயன் படுத்தப்பட்டுள்ளன. இது ஒழுங்க மைக்கப்பட்ட குற்றம் (organized crime) வடிவத்தில் செயல்படும் சைபர் கும்பல்களின் திட்டமிட்ட செயலாகவும், பல்வேறு மாநிலங்களில் பரவலாக நடந்துகொண்டு இருப்பதாகவும் தெரி விக்கப்படுகிறது. இந்த கணக்குகளை திறக்கும்போது கேஒய்சி (KYC) விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. பல கணக்குகள், போலி அடை யாள ஆவணங்கள் மூலம் திறக்கப் பட்டுள்ளன. இதில், உண்மையான நபருக்கு தெரியாமலும், சில நேரங்களில் அவர்களது ஒத்துழைப்புடனும் கணக்குகள் தொடக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோதச் செயல்களில், இடைத்தரகர்கள், இ-மித்ரா (e-Mitra) முகவர்கள், மற்றும் சில வங்கி ஊழி யர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதாக வும் சிபிஐ தெரிவித்துள்ளது. பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களுக்குப் பின்னால் செயல்படும் குழுக்கள், இவ்வகையான கணக்குகளைப் பண பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஐ தற்போது பல்வேறு மாநி லங்களில் இந்த போலிக் கணக்குகள் தொடர்பாக தீவிர விசாரணையை மேற் கொண்டு வருகிறது. மேலும், சைபர் மோசடிகள் தொடர்பான சிபிஐ விசார ணையில், ஒருமுறை மட்டுமே பயன் படுத்தப்படும் போலி வங்கிக் கணக்கு கள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளி யாகியுள்ளன. அதாவது, இக்கணக்கு கள் மோசடி வழியாக கிடைக்கும் பணத்தை வேகமாகப் பரிமாற்றம் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. தேவையான அளவு பணத்தை பல வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிய பின், அந்தக் கணக்குகள் உடனடியாக மூடப்பட்டு விடுகின்றன. இந்த நடைமுறை காரணமாக, மோசடியின் பிணைப்பை கண்டறிவது சிக்கலாகிறது. குற்றவாளிகளையும் அடையாளம் காணும் முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன. இது சைபர் குற்றத் தடுப்புக்கான நடவடிக்கைகள் எதிர்கொள்ளும் முக்கியமான தடையாகும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.