world

இஸ்ரேலின் அழிவை தடுக்கவே அமெரிக்கா போரில் இறங்கியது ஈரான் அதன் முகத்தில் பலமாக அறைந்தது – கமேனி

இஸ்ரேல்-ஈரான் சண்டை நிறுத்திற்கு பிறகு ஈரான் உச்சபட்ச தலைவர் அலி கமேனி தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் இஸ்ரேலின் அழிவை தடுப்பதற்காகவே அமெரிக்கா இந்த போரில் இறங்கியது. அதைத்தவிர அவர்களுக்கு வேறு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, போலி சியோனிச ஆட்சியை வென்ற நமது வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழப்பங்கள் மற்றும் அனைத்து வகையான பேச்சுக்களுக்கும் மத்தியில், இஸ்ரேல் நம்முடன் நடத்திய போரில் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டு நசுக்கப்பட்டது.

மேலும் அமெரிக்காவின் ராணுவத்தையும் வென்ற எங்கள் அன்பான ஈரானிய வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அமெரிக்க அரசு நேரடியாக நம்முடன் போரில் ஈடுபட்டது.  அமெரிக்கா அப்படி செய்யவில்லை என்றால், சியோனிச ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அது உணர்ந்திருந்தது. இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியில் தான் அது போரில் நுழைந்தது. ஆனால் எதையுமே சாதிக்கவில்லை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உதெய்த் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தி ஈரான் அமெரிக்காவின் முகத்தில் பலமாக அடித்தது. 

முக்கியமான தருணத்தில் இப்பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத்தளங்களை ஈரானால் தாக்க முடியும். எதிர்காலத்தில் ஈரான் மீது ஏதேனும் ஆக்கிரமிப்பு நடடிக்கை எடுக்கப்பட்டால் எதிரி நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.