tamilnadu

பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி. செவிலியர்கள் தர்ணா

பணி நிரந்தரம் செய்யக்கோரி  எம்.ஆர்.பி. செவிலியர்கள் தர்ணா

சென்னை, ஜூன் 26 - தொகுப்பூதியத்தில் பணி யாற்றும் அனைத்து செவிலியர் களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 26) சென்னையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திமுகவின் தேர்தல் வாக்குறு திபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதி மன்ற உத்தரவுப்படி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணி யிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணி  நீக்கம் செய்யப்பட்ட செவிலியர் களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். எம்.ஆர்.பி. தொகுப் பூதிய செவிலியர்களுக்கும் ஊதி யத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி இந்த தர்ணா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களி டம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. சசிகலா, “எம்.ஆர்.பி. செவிலியர்களின் கோரிக்கை களை அரசு  நிறைவேற்ற மறுத்து வருகிறது. நூறு நோயாளி களுக்கு ஒரு செவிலியர் என்ற நிலை உள்ளது. இதனால் செவி லியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அரசு நல்ல பல  திட்டங்களை கொண்டு வந்தா லும், செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.  எனவே, செவிலியர்கள், மருத்துவ பணியாளர் காலிப் பணி யிடங்களை நிரப்பவேண்டும். தேசிய மருத்துவ ஆணை யம் மற்றும் இந்திய பொது  சுகாதார தரநிலை (ஐபி எச்எஸ்) பரிந்துரைப்படி நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்” என்றார். முன்னதாக, போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் சா. டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார்.  சங்கத்தின் பொதுச் செய லாளர் நே. சுபின், பொருளாளர் ச. ஹேமசந்திரன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலத் தலைவர் வே. விஜயகுமரன், தமிழ்நாடு ஆய்வக நுட்பனர் சங்க பொதுச் செயலாளர் த. ஏழுமலை, அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் வி. சிவ குமார், தென் சென்னை  மாவட்டத் தலைவர் கோபி நாதன், மாவட்டச் செயலாளர் த. முத்துகுமாரசாமி வேல் உள்ளிட்டோர் பேசினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் நிறைவுரையாற்றி னார்.