tamilnadu

img

காவிரியில் பாசனத்திற்கு 22,500 கனஅடி நீர் திறப்பு

காவிரியில் பாசனத்திற்கு 22,500 கனஅடி நீர் திறப்பு

சேலம், ஜூன் 26 - காவிரி டெல்டா பாசனத் திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகத்தில் இருந்து  தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளதால், தமிழக எல்லைப் பகுதியான ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரித் துள்ளது. இதனால், அணையிலிருந்து நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை கார ணமாக கபினி, கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பிவிட்டன.  இதனால், கபினி அணையில் இருந்து 30,000 கன அடியும், கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 33,076 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.