சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!
புளோரிடா, ஜூன் 26 - இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களுடன் பயணித்த ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம். ஜூன் 26 அன்று இந்திய நேரப்படி மாலை 4:01 மணியளவில் பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. டாக்கிங் (docking) என்ற விண்கலனையும், விண்வெளி நிலையத்தையும் இணைக்கும் பணி மாலை 4:15 மணிக்கு நிறைவடைந்தது. நாசாவின் நேரடி ஒளிபரப்பின் மூலம் விண்கலம் விண்வெளி நிலையத்தை நெருங்குவதையும் அந்த விண்கலனில் இருந்து வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைவதையும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கண்டனர். டிராகன் விண்கலனில் இருந்து 4 வீரர்களும் விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த வீரர்கள் அவர்கள் அனைவரையும் கட்டித்தழுவி வரவேற்று உணவு, பானம் கொடுத்தனர். இதன்மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விண் வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் சுபான்ஷு சுக்லா.