நேரில் நலம் விசாரித்த சிபிஎம் தலைவர்கள்
மே 17 இயக்கம் சார்பாக ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்து படுகாயமடைந்துள்ள சிவா திலீபனை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தி திணிப்பு போராட்டத்தில் சிவா திலீபனின் உணர்வு மதிக்கத்தக்கது. இவரைப் போன்றவர்கள் வாழ்ந்து தமிழை வாழ வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
