இந்தியாவின் “புலி மாநிலம்” என அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், புலி பாதுகாப்பு குறித்து கடும் கவலை எழுந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் 54 புலிகள் உயிரிழந்துள்ளன. 1973ல் ‘பிராஜெக்ட் டைகர்’ தொடங்கியதிலிருந்து ஒரே ஆண்டில் இவ்வளவு அதிக புலி மரணங்கள் பதிவானது இதுவே முதல் முறை.
