அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் இணைந்து கோவை பாஜக பிரமுகரின் தொழிலை முடக்கி ரூ 1.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதோடு, கடும் மனஉளைச்சலைக்கு உள்ளாக்கியதாகப் புகார் அளித்துள்ளார். இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.