world

img

முதலாளித்துவ கட்சிகளுக்கு பலத்த அடி; இடதுசாரிகள் பக்கம் திரும்பிய மக்கள்

கொழும்பு, செப். 22 - இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி தலைவர் அனுர குமார திஸா நாயக்க(55) வெற்றிபெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. 

இலங்கை ஜனாதிபதி தேர்தலில், முதல் சுற்றில் இடதுசாரி தலைவரான திஸாநாயக்க முன்னிலை பெற்றார். எனினும், வெற்றிக்குத் தேவையான 50 சதவிகித வாக்குகளை, அவர் உட்பட எந்தவொரு வேட்பாளரும் பெறாத தால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. 

அதன் முடிவில் அனுர குமார திஸா நாயக்க 42.31 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைய குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்தார்.

இதையடுத்து அனுர குமார திஸா நாயக்க திங்களன்று இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

ஆரம்பம் முதலே   திஸாநாயக்க முன்னிலை

இலங்கையின் 9-ஆவது ஜனாதிபதி தோ்தலுக்கான வாக்குப் பதிவு அமைதி யான முறையில் சனிக்கிழமை (செப்.21) நடைபெற்ற நிலையில், வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றி ருந்தவர்களில் 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 போ்களில் 75 சதவிகிதம் போ் வாக்களித்தனா்.

சனிக்கிழமையன்று (செப்.21) இரவே- 9 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கி நடைபெற் றது. 12 மணி முதல் முடிவுகள் வெளி யாகத் துவங்கின. இதில், மொத்தமு ள்ள 22 தோ்தல் மாவட்டங்களில் 21 மாவட் டங்களுக்கான வாக்குகள் எண்ணப் பட்டு வந்த நிலையில்- தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 38 வேட்பாளர் களில், ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றார். 

முதன்முறையாக வீழ்த்தப்பட்ட வலதுசாரிகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க 56 லட்சத்து 34 ஆயிரத்து 915 வாக்கு களையும் (42.3 சதவிகிதம்) சஜித் பிரேம தாச 43 லட்சத்து 63 ஆயிரத்து 035 வாக்கு களையும்(32.76 சதவிகிதம்) பெற்றனர்.

சுயேச்சை வேட்பாளராகப் போட்டி யிட்ட அந்நாட்டின் தற்போதைய ஜனா திபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், சில அரசியல் கட்சிகளும், சமூக அமைப்பு களும் இணைந்து நிறுத்திய தமிழரசுக் கட்சி ஆதரவாளர் பா. அரியநேந்திரன் பாக்கியசெல்வம், முன்னாள் ஜனாதி பதி மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச, தமிழ் வேட்பாளர் திலகர்  உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்க ளையே பெற முடிந்தது. 

எனினும் எந்தவொரு வேட்பாள ரும் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை. 

இலங்கைத் தேர்தலைப் பொறுத்த வரை வாக்காளர்கள் விருப்பத்தின்  அடிப்படையில் மூன்று வேட்பாளர் களை தரவரிசைப்படுத்தி வாக்களிக்க வேண்டும். இதில் ஒரு வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மையை (50  சதவிகிதத்திற்கு மேல்) பெற்றால், அவர் வெற்றி பெற்றவராக அறி விக்கப்படுவார். இல்லையெனில், வாக்காளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை தேர்வு வாக்கு கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டு, முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்த வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை எந்தத் தேர்தலும் இரண்டா வது சுற்று முன்னுரிமை வாக்கு எண்ணிக்கைக்குச் சென்றதில்லை. ஆனால், தற்போது முதன்முறையாக இலங்கை ஜனாதிபதி தேர்தலானது, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணி க்கைக்குச் சென்றது. இதில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று ஜேவிபி தலை வர் அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாகவும், சஜீத் பிரேமதாச இரண்டாமிடத்தையும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இலங்கையின் 76 ஆண்டுகால ஜனநாயக ஆட்சி மற்றும் 46 ஆண்டு கால ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், முதலாளித்துவக் கட்சிகள் தோற் கடிக்கப்பட்டு, மார்க்சிய - லெனினி யத்தை தமது அடிப்படைக் கொள்கை யாக அறிவித்துக் கொண்ட ஓர் இடது சாரிக் கட்சி முதன்முறையாக வெற்றி பெற்றது இலங்கை மக்கள் பயணிக்கும் புதிய திசைவழியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

27 அமைப்புக்களை இணைத்து  தேசிய மக்கள் சக்தி கூட்டணி

ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் இடதுசாரித் தலைவர் என்ற  பெருமையைப் பெறும் ஜேவிபி  தலைவரான அனுர குமார திஸாநா யக்க, 2022-இல் இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்ட போது, மக்கள் போராட்ட த்தை முன்னின்று நடத்தியவர் ஆவார்.

அவர் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியின் தலைவர் என்றாலும், இந்த தேர்தலில், 27 சிறு  அமைப்புக்களை இணைத்துக் கொண்டு ‘தேசிய மக்கள் சக்தி’  என்ற கூட்டணி சார்பில் களமிறங்கி யிருந்தார். ‘மாற்றம் ஒன்றே தீர்வு’ என்ற முழக்கத்தையும், ‘வளமான நாடு, அழ கான வாழ்க்கை’ உத்தரவாதத்தையும் முன்வைத்து தீவிர தேர்தல் பரப்புரை யில் ஈடுபட்டார். 

இந்த முழக்கங்களின் மீது நம்பி க்கை கொண்ட இலங்கையின் இளை ஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினரும் அனுர குமார திஸாநாயக்கவுக்கு பெருவாரியான வாக்குகளை அள்ளித்தந்துள்ளனர். தென்னிலங்கை மட்டுமல்லாது, தமி ழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் திஸாநாயக்க வுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

விரிவடைந்த ஆதரவு தளம்

இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஆயு தப்போராட்டம் நடத்திய அதே கால கட்டத்தில், உழைக்கும் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஜேவிபி -யும் இலங்கையில் ஆயுதமேந்தி அர சுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி யது. பின்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது. அப்போதிருந்து தொட ர்ச்சியாக தேர்தலில் போட்டியிட்டாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட 3.16 சதவிகித வாக்குகளையே பெற முடிந்தது. எனினும்,  2022-இல்   இலங்கையில் பெரிய அரசியல் பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதற்கு எதிரான போராட்டத்தில் ஜேவிபி தலைவரான அனுர குமார  பெரும் எண்ணிக்கையிலான மக்களை போராட்டக் களத்தில் திரட்டினார். இது ஜேவிபி-க்கு ஆதரவுத் தளத்தை உருவாக்கியது. அது இத்தேர்தலில் பிரதிபலித்துள்ளது.