world

img

தாய்லாந்து-கம்போடியா உடனடி போர் நிறுத்தம்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அமெரிக்கா மற்றும் சீனாவின் தூதர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாய்லாந்து-கம்போடியா "உடனடி மற்றும் நிபந்தனையற்ற" போர் நிறுத்தத்திற்கா ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் தாய்லாந்தின் இடைகாலப் பிரதமர் பூம்தாம் வெச்சாயச்சாய் மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் ஆகிய இருவரும் இந்த பேச்சுவார்த்தையில் நேரடியாக கலந்து கொண்டனர். 

தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நடந்துவரும் எல்லைப் பிரச்சினையால் ஏற்பட்ட ராணுவ மோதல்களில் இரு தரப்பிலும் மொத்தம் 35 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,70,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மோதலுக்கு அமைதியான தீர்வை அமெரிக்கா மற்றும் சீனா மலேசியா மூலமாக எடுத்த நடவடிக்கைகள் மூலமாக தற்போது போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இரு நாடுகளின் ராணுவத் தளபதிகளுக்கு இடையேயான சந்திப்பு செவ்வாய்கிழமை(29-07-2025) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.