what-they-told

img

களக்காடு பகுதியில் இலைக்கருகல் நோயால் வாழைகள் பாதிப்பு

திருநெல்வேலி, டிச. 12- களக்காடு பகுதியில் முக்கிய தொழில் விவசாயமாகும். ஆண்டுதோறும் ஆயிரக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் செய்யப்பட்டு வரு கிறது. இந்த ஆண்டு விவசாயி கள் கடந்த ஜூன் மாதம் வாழை கள் பயிர் செய்தனர் .தற்போது நடவு செய்யப்பட்டு 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் வாழை யை இலை கருகல் நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்கிய வாழை மரத்தின் இலைகள் பழுத்து  மஞ்சள் நிறமாகி விடுகிறது. இத னால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. இந்த  நோயி னால் வாழைத்தார்கள் திரட்சி யாக இருக்காது என்றும் மகசூல்  பாதிக்கும் என்றும் விவசாயி கள் கூறுகின்றனர் . களக்காடு சுற்றுவட்டாரமான மூங்கிலடி, சிதம்பராபுரம், கலுங்கடி கருப்பன் தோப்பு ,மேல்பத்தை அம்பேத்கர் நகர் ,சிவபுரம், மஞ்சு விலை கீழபத்தை ,கருவேலங் குளம் ,பத்மநேரி வடகரை, தம்பிதோப்பு , எஸ்என், பள்ளி வாசல்,சாலைபுதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30,000 ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பல லட்ச வாழைகள் இலை கருகல் நோ யால் வாடி வதங்கி காணப்படு கிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ள னர். தற்போது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகு திகளில் தொடர் மழை காணப் படுகிறது. தொடர் மழை கார ணமாக மழையின் ஈரம் காயா மல் தொடர்ந்து நீடிப்பதால் இந்த நோய் தாக்கியதாக கூறப்படு கிறது இதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்து களை வாங்கி வாழைகளுக்கு தெளித்தும் நோய் கட்டுக்குள் வர வில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.