இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நாளை மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை வங்கக்கடல் பகுதிகளில் நாளை(நவ.25) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் எனவும் வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவது கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
