tamilnadu

img

ஆதித்யநாத்தை கைது செய்யுங்கள்!

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் மசூத் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட அம்மாநில பாஜக முதல்வர் ஆதித்யநாத், ‘புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரும், இம்ரான்மசூத்தும் உறவினர்கள்’ எனபொய்யான தகவலைப் பரப்பியுள்ளார்.இதற்குத்தான் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். “இஸ்லாமிய பெயர் வைத்திருப்பதால் மட்டுமே இருவரும் உறவினர்கள் எனயோகி ஆதித்யநாத் பேசியிருப்பது மதரீதியான வன்முறைகளுக்கு வழி வகுக்கும்”என்றும், “எனவே, ஆதித்யநாத் மீது 153-ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் கைதுசெய்ய வேண்டும்” என்றும் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

;