ஈரானில் 6 ராணுவ விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாக கூறி இஸ்ரேல் கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியது.
இரண்டாவது வாரமாக ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் என்பது நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி இந்தப்போருக்குள் அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதனால் மத்தியக்கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 6 விமான நிலையங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இத்தாக்குதலின்போது எப்-14, எப்-5 மற்றும் ஏஹெச்-1 விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், விமான நிலையத்தின் ஓடுபாதை, சுரங்கப்பாதை, எரிபொருள் நிரப்ப பயன்படும் விமானமும் சேதம் அடைந்துள்ளதாகத் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷியா சென்று ஜனாதிபதி புதினை சந்தித்து பேச இருக்கிறார்.