தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரடின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, மதுரை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், பெரம்பலூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 7 மாநகராட்சி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமனம். திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐஏஎஸ் நியமனம். திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சரவணன் ஐ.ஏ.எஸ் நியமனம். செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சினேகா ஐஏஎஸ் நியமனம். மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரவீன் குமார் ஐஏஎஸ் நியமனம். விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சுகபுத்ரா ஐஏஎஸ் நியமனம். ஈரோடு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கந்தசாமி ஐஏஎஸ் நியமனம். நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக துர்கா மூர்த்தி ஐஏஎஸ் நியமனம். சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொற்கொடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.