மாணவர்களிடம் ஆபத்தான வழிமுறையை காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி
யோகாவில் கடினமான “புஷ் அப்ஸ்” உள்ளதா?
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை வேலம் மாள் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக் கான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட னர். இந்நிகழ்வில் ஆர்.என்.ரவி யோகா பிரிவில் இல்லாத “புஷ் அப்ஸ்” உடற்பயிற்சி பிரிவை மாணவர்கள் மத்தியில் செய்து காட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். யோகாவில் “புஷ் அப்ஸ்” உள்ளதா? ஜிம் வகை உடற்பயிற்சிகளில் மிக முக்கியமானது “புஷ் அப்ஸ்” மற்றும் “பிளாங்க்” ஆகும். இதில் புஷ் அப்ஸ் மிக கடினமானது மற்றும் மோசமானது. ஆரோ க்கிய உடல்வாகு மற்றும் போதுமான பயிற்சி இல்லாமல் புஷ் அப்ஸ் பயிற்சி மேற்கொண்டால் தீவிர உடல்நலக்குறைவு அல்லது 100% மாரடைப்பு மூலம் உயிரி ழப்பை கூட ஏற்படுத்தலாம். அதனால் இந்த வகை பயிற்சியை இளைஞர்கள் அதிகம் செய்ய மாட்டார்கள். உடற்பயிற்சி கூடங்களில் கூட பயிற்சி யாளர்கள், பயிற்சி செய்யும் நபர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்வாகு திறன் களை பொறுத்தே புஷ் அப்ஸ் செய்ய அனுமதி வழங்குவார்கள். அதே போல “பிளாங்க்” வகை உடற்பயிற்சியும் சற்று கடினமானது ஆகும். இது புஷ் அப்ஸ் ஒரு உருமாறு வகை தான். தொடர்ச்சியாக 3 நிமிடம் இடைவிடாமல் பிளாங்க் எடுத்தால், தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. “புஷ் அப்ஸ்” மற்றும் “பிளாங்க்” உடற் பயிற்சிகளின் நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வேலம் மாள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சர்வ தேச யோகா தின நிகழ்ச்சியில், யோகாவின் ஒருபகுதி தான் “புஷ் அப்ஸ்” என கூறி, 51 புஷ் அப்-களை (அதையும் சரியாக, விதி களின் படி ஒழுங்காக எடுக்கவில்லை) எடுத்து வருங்கால மாணவர்களிடம் தவ றான தகவல்களை பரப்பியுள்ளார். ஆளுநரின் செயல் மிகவும் தவறானது யோகா என்பது மென்மையான பயிற்சி ஆகும். அதாவது பரபரப்பு இல்லாத, அமை தியான, அதிகம் வியர்வை கொட்டாத உடற்பயிற்சி ஆகும். அதனால் ஜிம் வகை உடற்பயிற்சி பிரிவான “புஷ் அப்ஸ்” மற்றும் “பிளாங்க்” யோகா பிரிவில் கிடையாது. எனினும் புஷ் அப்ஸ் மற்றும் பிளாங்க் போன்று யோகாவில் “தண்டாசனம்” மற்றும் “சதுரங்க தண்டாசனம்” என இரண்டு பயிற்சிகள் உள்ளன. புஷ் அப்ஸ், பிளாங்க் போன்றல்லாமல் வெறும் 30% மாதிரிகளுடன் தான் தண்டாசனம், சதுரங்க தண்டாசனம் இருக்கும். அதனால் யோகா நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி புஷ் அப்ஸ்-களை எடுத்து, யோகாவின் ஒரு பகுதியாக வெளிப்படுத்தியது மிகவும் தவறானது. சிறுவர்களை கவனமாக கையாள வேண்டும் பொதுவாக பள்ளி மாணவர்களிடம் சில விஷயங்களை வெளிப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சினிமாவில் நடக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட விளை யாட்டுகளை கண்டால் அதே மாதிரி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். உதாரணத்திற்கு அமெரிக்காவில் டபிள்யுடபிள்யுஇ (WWE) என்ற கண்காட்சி மல்யுத்தப் போட்டி ஒன்று நடைபெற்று வருகிறது. இது மிகவும் கவர்ச்சி கரமான, ஆனால் கொடூரமான சண்டை தொகுப்பாகும். இதற்கு இந்தியாவிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனை வீட்டில் காணும் மாணவர்கள், பள்ளிக்குச் சென்று டபிள்யுடபிள்யு போன்று சக நண்பர்கள் மீது ஸ்மாக் (தாக்கு தல்) நடத்திய சம்பவங்களும் நிகழ்ந்துள் ளன. இதனால் தான் டபிள்யுடபிள்யு நிர்வா கம் ஒவ்வொரு மல்யுத்தப் போட்டிகளிலும் ‘please don’t try this at home (தயவு செய்து இதனை வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்)’ என அடிக்கடி ஒளிபரப்பு செய்வார்கள். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி புஷ் அப்ஸ் எடுத்து, அதை யோகாவின் ஒரு பகு தியாக வெளிப்படுத்தியது பள்ளி மாண வர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள் ளது. மாணவர்கள் ஆளுநர் செய்தார், அத னால் நாங்கள் செய்தோம் எனக் கூறி உடல்நலத்தை இழந்தால் என்ன செய்வது? அதனால் இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல் மேற்கொள்வது நல்லது. எம்.சதீஸ்குமார்