உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை
மும்பை உள்ளிட்ட 6 உயர்நீதி மன்றங்களுக்கு புதிய நீதிபதி களை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம்பெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் இதற்கான பரிந்துரைக்கு அனுமதி அளித்துள்ளது. அதில், மும்பை உயா்நீதிமன்றத்தின் மூன்று வழக்குரைஞா்களான அஜீத் பக்வான்ராவ் கதேதான்கா், ஆா்த்தி அருண் சேத், சுஷீல் மனோகர்கோ டேஷ்வர் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள் ளது. கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான பார்த்தசாரதி சென், அபூா்வா சின்ஹாரே ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் பிரசன்ஜித் விஸ்வாஸ், உதய் குமார், அஜய்குமார் குப்தா, சுப்ரதிம் பட்டாச் சார்யா, பார்த்தசாரதி சாட்டா்ஜி, ஷப்பர் ரஷிதி ஆகியோர் ஓராண்டு கூடுதல் நீதிபதிகளாக பதவி நீட்டிக்கப் பட்டுள்ளனர். சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி ரவீந்தா்குமார் அகா்வால், ஆந்திர உயர்நீதிமன்றத்துக்கு ஹரிநாத் நூன்பள்ளி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜகதம், நியாயபதி விஜய் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.