பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய் காலமானார்
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளு மன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க் கிழமை காலமானார். உடல்நலக் குறைபாடு காரணமாக ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவா், அங்கு சிகிச்சை பல னின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. குஜராத்தில் பிறந்த அவர், பிரிட்ட னில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரியில் 1965 முதல் 2003-ஆம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றினார். 1971-ஆம் ஆண்டு அந்நாட்டில் உள்ள லேபர் கட்சியில் சோ்ந்தார். கடந்த 2008 இல் ஒன்றிய அரசின் உயரிய விருது களில் ஒன்றான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். பிரதமர் இரங்கல் பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், புகழ்பெற்ற சிந்த னையாளர், எழுத்தாளர் மற்றும் பொரு ளாதார நிபுணருமான மேக்நாத் தேசா யின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் இந்தியா மற்றும் இந்திய கலாச்சா ரத்துடன் எப்போதும் தொடா்பில் இருந்தார். இந்தியா-பிரிட்டன் உறவை வலுவாக்குவதில் அவா் பெரும் பங்கு வகித்தார் என்று தெரிவித்துள்ளார்.