tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து சிபிஎம் வாகன பிரச்சார இயக்கம்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து சிபிஎம் வாகன பிரச்சார இயக்கம்

அரியலூர், ஜுன் 23-  அரியலூர் மாவட்டம் திருமனூர் ஒன்றியத்தில் 2 சக்கர வாகன பிரச்சார இயக்கம்  ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. சாமிதுரை தலைமையில் நடைபெற்றது.  வாகன பிரச்சாரத்தை சவுரிராஜன் தொடங்கி வைத்தார். பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, கே.கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என். ஏசுதாஸ். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜா, கலைமணி மற்றும் ஜெ. வரபிரசாதம், ஆரோக்கியசாமி, கணேசன், பாலாஜி. கலையரசன், அறிவழகன், சுப்பிரமணியன், சிவகொழுந்து, சிவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பிரச்சார பயணமானது திருமானுர், அன்னிமங்களம், அரண்மணைகுறிச்சி, பு.மேட்டுதெரு. கண்டிராத்தம், இளந்தகூடம், வெங்கனூர், கரைவெட்டி, காவெட்டாங்குறிச்சி, குந்தபுரம், முடிகொண்டான் உள்ளிட்ட கிராமங்களில் முக்கிய வீதிகளின் வழியாக மேற்கொள்ளப்பட்டது.  பயணத்தில், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும், அனைத்து  பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அரிசி ஆலை அமைக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு கூடுதலான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும், மாதமாதம் மின் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஒன்றியம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்திட வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.  பொன்னமராவதி  பொன்னமராவதி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை. நாராயணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், காயத்ரி, வசந்தகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள்,  வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் பி. ராமசாமி, கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  வேந்தன்பட்டியில் துவங்கிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் ஆலவயல், சடையம்பட்டி, மேலத்தானியம், ஒலியமங்கலம், காரையூர், அரசமலை, கொப்பனாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.  அறந்தாங்கி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மணமேல்குடி தாலுகா குழு சார்பாக தாலுகா முழுவதும் பிரச்சார இயக்கம் ஒன்றியச் செயலாளர் என். காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன், மாவட்டக் குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியன், மணமேல்குடி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கரூ. இராமநாதன், வி. ரபீக்கான், எம்.தங்கவேல், கஸ்தூரி, ஜெகதை கிளை செயலாளர் வி. லெட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.