“10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 8 இல் மட்டுமே தண்டனை”
10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை யில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகலே கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணை அமைச் சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், “அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 1,398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அமலாக்கத்துறை வழக்குகளில் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாததால் 77% வழக்குகளில் குற் றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை.10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் 8 வழக் கில் மட்டுமே தண்டனை விதிக்கப் பட்டுள்ளது, 0.13% வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.