8 ஆண்டு போராட்டத்திற்குப் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை எப்போது தருவீர்கள்
பிரதமருக்கு முதல்வர் கேள்வி
சென்னை, செப். 23 - 8 ஆண்டு போராட்டத்திற்குப் பின், தற்போது ஜிஎஸ்டியைக் குறைத்திருப்பது போல, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியையும் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார். ஜிஎஸ்டி வரிக்குறைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது சமூக வலைதள பக்கத்தில் கருத்துப் பதி விட்டுள்ளார். அதில், “ஜிஎஸ்டி குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதைத் தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சி களான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கை களை மேற்கொண்டி ருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக் குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசு களின் பங்கிலிருந்து தான் செய்யப்படு கிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வரு கிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் முதலமைச்சர், “தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்ப தன் வழியாக, இந்தியா வளர்ச்சி பெற முடியாது. எனவே, கூட்டாட்சிக் கருத்தி யலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.