tamilnadu

img

சிவகாசியில் சிறப்புக் கருத்தரங்கம்

சிவகாசியில் சிறப்புக் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநாட் டை விளக்கும் வகையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. சிவகாசி பைபாஸ் முக்கில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா தலைமை வகித்தார். மாநகரச் செயலா ளர் ஆர்.சுரேஷ்குமார் வரவேற்புரை யாற்றினார். மாநில செயற்குழு உறுப்பி னர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயலா ளர் ஆ.குருசாமி ஆகியோர் விளக்கிப் பேசினர். “தொழில் வளர்ச்சியில் தொழிலா ளர் நலன்களில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு” என்ற தலைப்பில் மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம், “சோசலிசமே மாற்று“ என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.18 லட்சம் வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மகாலட்சுமி, கே.முருகன், எம்.முத்துக்குமார், வி.முருகன், ஆர்.பால சுப்பிரமணியன், எஸ்.லட்சுமி, எல்.முரு கன், பி.மாரியப்பன், எஸ்.வி.சசிக் குமார், எம்.சுந்தரபாண்டியன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பி னர் பி.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.  முன்னதாக புயல் தப்பாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.