சென்னை, ஜூன் 20- காவல்துறை ஆணையர் அறிவித்த வாகன வேகக்கட்டு ப்பாட்டை மறு பரி சீலனை செய்ய வேண்டும்என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு கோரி்க்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர காவல் ஆணையர் அறிவித்துள்ள வாக னங்களுக்கான வேகக் கட்டுப் பாடு 40 கி.மீ. என நிர்ணயம் செய்யப்பட்டி ருக்கிறது. தற்போதுள்ள அறிவியல், மக்களின் அவசர தேவை, துரித போக்குவரத்து போன்றவற்றை கவனத்தில் கொண்டு, சென்னை நகருக்குள், காவல் ஆணையர் அறி வித்துள்ள வேகக்கட்டுப்பாடான 40 கி.மீ. என்பதை, அத்தியாவசிய சேவையான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, மறு பரிசீலனை செய்து, உரிய ஆய்வுகளுடன், உயர்த்தி அறிவிக்க வேண்டும். மேலும், தற்போது அறிவிக்கப் பட்ட வேகக் கட்டுப் பாட்டினை வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கரம்,ஆட்டோ ஓட்டுனர், டெம்போ, லாரி ஓட்டுனர் மற்றும் மருத்துவ சேவையின் தேவைக் காகவும் இந்த கட்டுப்பாட்டை அவ சர தேவை கருதி மீறுகின்றபோது, அதனால் அபராதக் கட்டணம் செலுத்தும் நிலை உருவாக்கப் பட்டு மிகப்பெரிய வாழ்வாதார சிக்கலுக்கு உள்ளாக்கப்படு வார்கள். ஒட்டுமொத்த வாகன ஓட்டு னர்கள், வாகன உரிமையாளர்கள், மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து போன்றவற்றை ஆய்வு செய்து, தற்போது அறிவித்துள்ள வேகக்கட்டுப் பாட்டை உயர்த்தி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.