tamilnadu

img

தீக்கதிர் வளர்ச்சி நிதி வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு தொடர்பான சிறப்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமையேற்றார். இக்கூட்டத்தின் போது, தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.50 ஆயிரத்தை, கட்சியின் நாகர்கோவில் பி கிளை உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான மா.பால் வழங்கினார். இந்நிகழ்வில் தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, மதுரை பதிப்பு பொறுப்பாளர் கே.ஜி.பாஸ்கரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.அகமது உசேன், எம்.அண்ணாதுரை, துணை ஆசிரியர் சி.முருகேசன் மற்றும் தீக்கதிர் முகவர்கள், செய்தியாளர்கள், கட்சியின் வட்டாரச் செயலாளர்கள் பங்கேற்றனர்.