tamilnadu

img

மயிலாடுதுறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக! - ஜி.ஸ்டாலின்

நவம்பர் 11 அன்று வரலாறு காணாத  வகையில் பெய்த கனமழையால் மயி லாடுதுறை மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. 120 ஆண்டு களுக்கு பிறகு இது போன்ற மழையளவு பெய்திருப்பதாக வானிலை ஆய்வு அறிக்கை  கூறுகிறது. 44 செ.மீ அளவிற்கான கனமழை  ஒரே இரவில் கொட்டி தீர்த்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்டமே வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது.

அழுகிய நெற்பயிர்கள்

வெள்ளநீர் வடியாமல் 1 வாரத்திற்கு நீரில்  மூழ்கி இருந்த சம்பா பயிர்கள் தற்போது வெள்ள நீர் வடிந்த பிறகு அழுகிய நிலை யில் காட்சியளிக்கின்றன. மாவட்டம் முழு வதும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் சம்பா  பயிர்கள் நீரில் மூழ்கின. கூட்டுறவு வங்கி யில் கடன் பெற்று, நகைகளை அடகு வைத்து  விவசாயம் செய்த விவசாயிகள் பெரிதும் மன வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். பின்தங்கி நடவு செய்யப்பட்ட பயிர்கள் முற்றி லும் அழுகிவிட்டன. 35 நாட்களுக்கு மேல்  நடவு செய்த பயிர்கள் தூர் வெடித்து வரு வதும், மகசூலும் தராது என்ற மனவேதனை யுடன் விவசாயிகள் உள்ளனர்.

நூற்றுக்கணக்கான கிராமங்கள்

கனமழையால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டன. வெள்ளநீர் வடிந்து வருகின்ற நிலையில் மண்சுவரால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுகின்றன. சேறும் சகதிகளையும் தற்போது சுத்தம் செய்து வருகின்றனர். சீர்காழி பகுதியில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பனாறு கரை உடைந்து சூரக்காடு கிராமமே மூழ்கின. சுமார் 350 வீடுகள் மழைநீரால் சூழப்பட்டன. மாவட்டம் முழு வதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்  பாதிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் வருகையும்,  நிவாரணப் பொருட்களும்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14.11.2022 அன்று சீர்காழி, கொள்ளிடம் பகுதி களுக்கு வருகை தந்தார். சீர்காழி உமை யாள்பதி கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரணத் தொகுப்புப் பொருட் களை வழங்கினார்.  சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் குடும்ப அட்டைக்கு ரூ.1000- வழங்கப்படும் என அறி விக்கப்பட்டது. இதனால், மாவட்டம் முழு வதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிர்ச்சி யும் ஏமாற்றமும் அடைந்தனர்.

சிபிஐ(எம்) சட்டமன்றக்குழு ஆய்வு

கனமழையால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற குழுத் தலைவர் நாகை மாலி,  கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பின ரும், விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளருமான எம்.சின்னதுரை ஆகியோர் 14.11.2022 அன்று பாதிப்புகளை பார்வையிட்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.  மயிலாடுதுறையில், மேல்மருதாந்த நல்லூர் ஆனதாண்டவபுரம், பொன்வாச நல்லூர், சேத்தூர் கொள்ளிடம் பகுதியில்  புளியந்துறை, புதுப்பட்டினம், சீர்காழியில்  கரையிறுப்பு, புதுத்துறை, செம்பனார் கோயில் பகுதியில் அ.புத்தூர், திருக்கடை யூர், டி.மணல்மேடு, திருவிடைக்கழி, குத்தா லம் பகுதியில் பெரம்பூர், சேத்தூர் ஆகிய  கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை யும், விவசாய தொழிலாளார்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.  புளியந்துறை, அ.புத்தூர், புதுத்துறை பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப் படாமையால் மக்கள் கண்ணீர் விட்டு அழு தனர். புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஏ.டி.நேதாஜி தனது சொந்த பணத்தை செலவ ழித்து உணவு சமைத்து வழங்கினார். செம்பனார்கோவில் ஒன்றியம் அ.புத்தூர் கிராம மக்களுக்கு சிபிஐ(எம்) சார்பில் 5 நாட்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பாத்திரம் வைத்து சமைத்துக் கொடுக்கப் பட்டது. மாவட்ட நிர்வாகம் 150 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறியது. ஆனால், பல ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழித்து உணவளித்தனர் என்பதுதான் உண்மையாகும்.

மாவட்ட நிர்வாகத்தின்  பாரபட்சமான அணுகுமுறை

தமிழக அரசின் நிவாரண அறிவிப்பும், மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்சமான அணுகு முறையும்  மயிலாடுதுறை, குத்தாலம் பகுதி மக்களை வஞ்சிப்பதாக உள்ளது. மயி லாடுதுறை ஒன்றியத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், குத்தாலம் கிழக்கு பகுதியில் உள்ள 6 ஊராட்சிக்கு மேற்பட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.

சரியான கணக்கெடுப்பு  செய்து நிவாரணம் வழங்குக!

மாவட்ட வருவாய்த் துறையும் வேளாண் துறையும் கிராமங்களுக்கு சென்று சரி யான கணக்கெடுப்பு செய்திட வேண்டும். முற்றிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரண மும், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங் களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணமும் வழங்க வேண்டும். அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் குடி யிருக்கவே இயலாத நிலையில் உள்ளன. மோசமான நிலையில் உள்ள அனைத்து தொகுப்பு வீடுகளையும் அப்புறப்படுத்தி விட்டு புதிய தரமான வீடுகளை கட்டித் தர  அரசு முன் வர வேண்டும். மழைநீரால் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டைகள், ஆதார் அட்டை, வாக்கா ளர் அடையாள அட்டை, பிற ஆவணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தை களின் பாடப் புத்தகங்கள் காணாமலும், சேதமடைந்து போய்விட்டன. இவையெல்லாம் கிடைப்பதற்கு விரைவில் அரசு நிர்வாகம் தலையீடுகள் செய்திட வேண்டும். கனமழையினால் கிராமப்புற இணைப்புச் சாலைகள் சேதமடைந்துள்ளன.

மனுக் கொடுக்கும் போராட்டம்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும், வீடுகளையும், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் இழந்த விவசாயத் தொழிலாளர்கள் நிவார ணம் வழங்கக் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனுக் கொடுக்கும் போராட்ட த்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் 22.11.2022 (இன்று) நடத்திட வுள்ளன.  இதில், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், விவசாய தொழி லாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மயி லாடுதுறை மக்களுக்கு உரிய நிவார ணத்தை, இழப்பீட்டை போர்க்கால அடிப் படையில் வழங்க தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.