விடுதலைப் போராட்ட வீரர்கள், குடும்பத்தினரின் ஓய்வூதியம் உயர்வு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 16 - 79-ஆவது சுதந்திர தினத்தை யொட்டி, சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை யாற்றினார். அப்போது, கட்டணமில்லா விடி யல் பேருந்து பயணத் திட்டம் மலைப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திற னாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது உட்பட ஒன்பது முக்கிய அறி விப்புக்களை முதலமைச்சர் வெளி யிட்டார். முதல் அறிவிப்பாக, மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதி யம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்ப டும். இரண்டாவதாக, விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங் களுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூ தியம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படும். மூன்றாவதாக, வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேது பதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித் தோன்றல்கள் மற்றும் வ.உ. சிதம்பர னாரின் வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். நான்காவதாக, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட் கால மாதாந்திர நிதியுதவி 15 ஆயி ரம் ரூபாயாக உயர்த்தப்படும். ஐந்தா வதாக, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண் களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 8 ஆயிரம் ரூபா யாக உயர்த்தப்படும். ஆறாவதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள் கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். ஏழாவதாக, தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். எட்டாவதாக, ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆகியவை தொடங்கப்படும். ஒன்பதாவதாக, தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது, திறனை மேம் படுத்தி வேலைவாய்ப்பு பெற நவீன தொழில்நுட்பங்கள் பத்தாயிரம் மாணவர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இந்த ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் உறுதியளித்தார். முதல்வர் மேலும் தெரிவிக்கை யில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்து பெரிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொரு ளாதாரமாக தமிழகம் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.