tamilnadu

மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கு சிபிஐ அதிகாரியை நோட்டமிட்டு கும்பல் பின்தொடருவதாக புகார்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கு சிபிஐ அதிகாரியை நோட்டமிட்டு  கும்பல் பின்தொடருவதாக புகார்

மதுரை, ஆக. 27 - அஜித்குமார் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.  அதிகாரியை நோட்டமிட்டு கும்பல் பின்தொடரு வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது. மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஏற்கெனவே காவல்துறையினர் 5  பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தில்லி யில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் விசாரித்து  விட்டு, மீண்டும் தில்லி சென்றுள்ளனர்.  தற்போது மதுரையில் உள்ள சிபிஐ அலுவல கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ள அதிகாரி தொடர்ந்து விசாரித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு  ஆட்டோ ஒன்றில் சிலர் கும்பலாக சிபிஐ அலு வலகம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் அங்கேயே வலம் வந்த அவர்கள்  திரும்பிச் சென்றுள்ளனர். இதுபோல் அவர்கள் 3 நாட்களுக்கு முன்பு  மீண்டும் வந்துள்ளனர். இதுபற்றி அந்த சி.பி.ஐ.  அதிகாரி கண்டு கொள்ளவில்லை. ஆனாலும்  நடந்த சம்பவம் குறித்து தங்களது மேல்அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அலுவல கத்தில் இருந்து அரசு சுற்றுலா மளிகைக்கு சென்று தங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதே ஆட்டோவில் வந்த 4 பேர்,  அரசு சுற்றுலா மாளிகையில் வந்து நோட்டம் பார்த்துச் சென்றுள்ளனர். அதை அறிந்த அந்த  சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், போலீசில் புகார் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆட்டோவில் வந்தவர்கள் அஜித் குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.