“எந்த தலைவரின் புகழ் பாட வும் நாங்கள் இனிப்பு பொட்டலங்களுடன் நீதிமன்றங்களில் அலைந்தது இல்லை ’’ “ எங்கள் அமைப்பில் சேர்ந்தால் நோட்டரி வாங்கித் தருகிறோம் என எந்த உத்தரவாதமும் கொடுத்த தில்லை ’’ “பார் கவுன்சில் தேர்தலுக்கு பைக் வாங்கி தருவோம் என்று நாங்கள் போட்டி இடுவதில்லை’’. வழக்கறிஞர் சங்க உறுப்பி னர் சேர்ப்புக்கு ஆண்டு தோறும் அலுவலக வாயிலில் தவம் கிடக் கிறோம். பெற்ற பிள்ளையாக இருந்தா லும் ரூ. 25 பெற்றுக்கொண்டு தான் உறுப்பினர் ஆக்குகிறோம். வழக்கறி ஞர்களின் நிதி பெற்றுத்தான் அமைப்பின் மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்துகிறோம். ஆட்சியாளர்களின் அராஜகமாக இருந்தாலும், உச்சநீதிமன்ற உத்த ரவுகளில் தவறு இருந்தாலும் சுட்டிக் காட்ட நாங்கள் என்றும் தயங்கிய தில்லை. அவசரநிலைக் கால கொடுமை கள் இனி ஒரு நாளும் அரங்கேறக் கூடாது என துவக்கப்பட்ட அமைப் பின் உறுப்பினர்கள் நாங்கள். 26 மாநிலங்களில் செயல்படும் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ் நாட்டின் உறுப்பினர்கள் நாங்கள்.
வழக்கறிஞர் சங்க தமிழ்நாடு மாநில மாநாடு இன்று (டிச.17) திருப்பூரில் துவங்குகிறது.கடந்த கால செயல்பாடுகள் இச்சங்கத்தின் மேன்மையை பறைசாற்றும். சேம நல நிதி நாங்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தில் உருவானது. இளம் வழக் கறிஞர்களின் உதவித்தொகை எங்க ளின் தொடர் போராட்டத்தின் விளைச் சல். நீதிமன்ற கட்டமைப்புக்காக, பெண் வழக்கறிஞர்களின் கோரிக்கை களுக்காக போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தியவர்கள் நாங்கள். சங்க அமைப்புச் சட்டத்தின் படி 3 ஆண்டுக்கு ஒரு முறை கூடி மாநாடு நடத்தி முடிவெடுக்க வேண்டி யவர்கள், பெருந்தொற்றின் பாதிப்பால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கூடுகிறோம். கொரோனா பெருந்தொற்று இன்று கட்டுப்படுத்தப்பட்ட போதும், மதவெறி என்ற வைரஸ் இந்தி யாவை ஆட்டுவிக்கிறது. அந்த வைரஸ் வழக்கறிஞர்களிடம் தொற்றா மல் இருக்க தடுப்பரண் அமைப்போம்.
நீதிபதி லோயா மரணத்திற்குப் பின்னும், பீகாரில் பட்டப் பகலில் ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட பின்பும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மாட்டுக்கறி உண்பவனை அடித்துக் கொல் என ராஜஸ்தான் சட்ட மன்ற உறுப்பினர் கூட்டம் போட்டு பேசியதை இந்த உலகமே பார்த்தது. ஆட்சியாளர்களின் கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டிய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சிலர் எம்.பி. பதவிக் காக 7000 கோடி ஊழல் வழக்கு உட்பட குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். அவசர நிலைக் காலத்தை விட பல கொடுமைகள் இன்று சொல்லா மல் அரங்கேறி வருகின்றன. இவற்றை யெல்லாம் கண்மூடி கடந்து விட வழக்கறிஞர்கள் தயாராக இல்லை. அந்த உறுதியோடு தமிழ்நாட்டில் 25 க்கும் மேற்பட்ட மாவட்ட மாநாடு களை நடத்தி தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் 400 பேர் திருப்பூர் மாவட்டத்தில் கூடுகிறோம். வழக்குகளின் நிலுவையை காரணம் காட்டி சட்டப்பூர்வமாக நடக்க வேண்டிய விசாரணைகளை கட்டப்பஞ்சாயத்துகளாய் முடிக்கும் உத்தரவுகளுக்கு இம்மாநாடு முடிவு கட்டும். நீதித்துறையின் கட்டமைப் பிற்கான நிதியை அதிகரிக்கவும். வழக்குகளை விசாரிக்க போதிய நீதி பதிகளை நியமனம் செய்யவும் கோரிக் கையை முன்வைக்கும் இம்மாநாடு.