சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர், ஆக. 29- ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை, கம்மந்தங்குடியைச் சேர்ந்தவர் நடராஜன் (68). இவர், 6 வயது சிறுமிக்கு 2024, பிப்ரவரி 27 ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்தனர். இதுதொடர்பாக, தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, நடராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டார்.