tamilnadu

img

ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

ஜெர்மனியில் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு 

சென்னை, ஆக. 31 - தமிழ்நாட்டுக்கு சர்வதேச முதலீடு களை ஈர்க்கும் நோக்கத்துடன் ஏழு  நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சனிக்கிழமை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஜெர்மனியில் வாழும் தமிழர் கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். “ஸ்டாலின் அப்பாவை ஜெர்ம னிக்கு வரவேற்கிறோம்” என்ற பதாகை யுடன் ஒரு சிறுமி மற்றும் பூங்கொத்து டன் தமிழர்கள் முதலமைச்சரை வர வேற்றனர். அவர்களின் பாசமிக்க வர வேற்பைப் பெற்றுக் கொண்ட முத லமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “இங்குள்ள எனது தமிழ்க் குடும்பத்தின் பாசத்தை கண்டு நெகிழ்ச்சியடைந்தேன். இங்கி ருந்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்கவும் நடவடிக்கை  எடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இந்தப் பயணத்தில் பல் வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.