தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, செப். 21- தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள் ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “சங்கப் பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை! இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்!” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும், வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழ கமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்ப மிட்டன. இதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15 ஆயிரம் கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4 ஆயிரம் நேரடி மற்றும் 6 ஆயிரம் மறைமுக) உருவாக்கப் படும். மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவன மானது, ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு (5 ஆயி ரம் நேரடி மற்றும் 40 ஆயிரம் மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியா வின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்து வதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங் களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழி வகுக்கும்” என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித் தார்.