மதுரை, ஜூன் 10- 195 நாட்களாக விதவைச் சான்றித ழுக்காக விண்ணப்பித்து அலைந்து தவித்த பெண்ணுக்கு 4 மணி நேரத்தில் வித வைச் சான்றிதழ் பெற்றுத் தரப்பட்டுள்ளது. மதுரை மக்களவை உறுப்பினர் மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட தெற்கு மண்டலத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தினார். இந்த முகா மில் சு.வெங்கடேசன் எம்.பி.,யைச் சந் தித்து, கணவரை இழந்து கைக்குழந்தை யுடன் வசிக்கும் பெண் ஒருவர் மனு அளித்தார். அதில், தமது குடும்ப நிலை யைக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் விதவைச் சான்றிதழுக்காக 195 நாட்க ளாக அலைவதும் தெரியவந்தது. அந்தப் பெண்ணின் மனுவைப் படித்த மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், அதிகாரிகளை அழைத்து, மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்; மனு ஏற்கப் பட வில்லையென்றால் அதற்கான கார ணத்தையாவது தெரிவியுங்கள் என் றார். அதிகாரிகளோ ஓரிரு நாட்களில் வழங்கிவிடுவதாக உறுதியளித்தனர். மக்களவை உறுப்பினரோ, மனு தாரர் 195 நாட்களாக அலைந்து கொண்டி ருக்கிறார். இதில் இனியும் தாமதிக்க இயலாது என்றார்.
மேலும் இந்த மனு விற்கு தீர்வுகண்டால் தான் முகாம் நிறை வடையும் என்று கூறியதோடு தாமும் அதுவரை காத்திருப்பதாகக் கூறினார். பிற்பகல் மூன்று மணிக்கு அதிகாரி கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசி இரவு ஏழு மணிக்கு அந்தப் பெண்ணுக்கு விதவைச் சான்றி தழ் அளித்தனர். அவர் நெகிழ்ச்சியில் கண்கலங்கி, சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நன்றி தெரிவித்துச் சென்றார். இப்பிரச்சனை குறித்து சனிக் கிழமை செய்தியாளர்களிடையே பேசிய மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், “ இது போன்ற மனுக்களை தாம தம் செய்யக்கூடாது. குறிப்பாக வித வைச் சான்றிதழ், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்கள் அந்தக் குடும்பத்திற்கு அரசின் உதவி கிடைப்பதற்கு அடிப் படை” என்றார். மேலும், இது போன்ற சான்றிதழ் களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தர விட வேண்டும். இந்தக் கோரிக்கையை செய்தியாளர்கள் மூலம் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன் என்றார்.