tamilnadu

img

ஆக்கிரமிப் (புப்) போரும் அதற்குரிய பூவும்! - ப.முருகன்

இருபத்தியோராம் நூற்றாண்டிலும் - மக்களாட்சி யுகத்திலும் கூட நாடுகளுக்கிடையே யுத்தம் - போர்கள் நடக்கின்ற போது வரலாற்றின் முந்தைய ஆரம்ப கால கட்டத்தில் போர்கள் இல்லாமலா இருக்கும்? இனக்குழுச் சமுதாயம் முதல் சிற்றரசுகள், குறுநிலமன்னர்கள், பேரரசுகள் காலத்தில் போர்  கள் தவிர்க்க முடியாதவையாக இருந்தன என்  பதே வரலாற்று உண்மை. போர்களைப் பற்றி வர லாற்றுப் பதிவுகள் இருப்பது ஒரு பக்கம். இலக்கி யப் பதிவுகள் இன்னொரு பக்கம். அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் எனப் பிரித்து வைத்துக் கொண்டு போர்கள் பற்றியும் மற்ற நிகழ்வுகள் பற்றியும் நிறைய எழுதியுள்ளனர். புறப்பொருள் என்றாலே போர் என்பது போல  அதற்கான இலக்கணங்களையும் ஏற்படுத்தி யுள்ளனர். அப்படித்தான் வெட்சி நிரை கவர்தல்,  மீட்டல் கரந்தையாம் என்றவர்கள் ‘வட்கார் மேல்  செல்வது வஞ்சி’ என்றனர். அதாவது எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்வது, தாக்கி கைப்பற்றுவதற்கு வஞ்சித் திணை என்று பெயர் வைத்துள்ளனர். அப்படி போருக்குப் போகும் போது அந்தப்படையினர் வஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு செல்வார்கள் என்றும்  இலக்கியம் படைத்துள்ளனர்.

வஞ்சி என்ற சொல்லுக்கு வஞ்சித்தல் என்ற  பொருள் உண்டு. வஞ்சி என்றால் பெண் என வும் சொல்வதுண்டு. குறவஞ்சி என்பது நாம் அறிந்தது தானே. பெண்களை வஞ்சிக் கொடி என்றும் இலக்கியத்தில் குறிப்பிடுவதுண்டு. இந்த வஞ்சி மலர் எப்படி இருக்கும்? வஞ்சி மரமா? கொடியா! வஞ்சி மரம் என்பது  மூங்கில் போன்ற மற்றொரு வகையான பிரம்பு  என்கிறார்கள். இது 10 மீட்டர் உயரம் வரை  வளரும் என்றும் குடை, நாற்காலி போன்றவை  செய்யப் பயன்படும் என்றும் கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த மரம் வளையும் தன்மையுடை யது. அதனால் தான் பிரம்பு போல் வளையும்  பெண்ணை வஞ்சி என்றார்கள். இது ஆகுபெயர்.  வஞ்சிக்கொடி என்று அழைக்கப்படுகிறது சீந்  தில் கொடி. வாடா வஞ்சி தலை மலைந்து / கூடார்மண்  கொளல் குறித்தன்று - என்கிறது ஒரு பாடல். புல்லிலை வஞ்சி புறமதில் அலைக்கும் / கல்  என் பொருநை (புறம்.. 387) என்பது வஞ்சித் திணை பற்றிய பாடல். இந்த வஞ்சி மரம் கலாமஸ் ரோட்டாங்  (Calamus rotarg) என்று தாவரவியலாளர் களால் அழைக்கப்படுகிறது. சரி இந்த மலர் எப்படி இருக்கும்? நீள் வாக்கில் அமைந்திருக்கும் கொத்துப்பூ அதா வது மஞ்சரி வகை மலர். இந்த பூ பார்ப்பதற்கு எருக்கம் பூ போல தெரியும். இந்தப பூக்களைப்  பறித்து தலைவியும் தோழியும் குவித்து வைத்து  விளையாடியதாக கபிலர் குறிஞ்சிப் பாட்டில் கூறியுள்ளார்.

இது ஒரு புறம். ஆனால் இந்த வஞ்சிப்பூ என்பது ஆற்றுப் பூவரசம்பூ என்கிறார் ஆதி  வள்ளியப்பன். இந்தப் பூவை ஏன்ஆற்றுப்பூவ ரசம் பூ என கூறுகிறார்கள் என்பதற்கு பொருநை  ஆற்றுப்புறத்தில் வளர்ந்திருந்தது என்கிறார். அதுவும் சேரநாட்டு ஆன்பொருநை ஆற்றங்  கரையில் என்கிறார். அதனால் தான் சேரர் தலை நகரம் வஞ்சி என்றழைக்கப்பட்டது என்றும் கூறு கிறார். தமிழ்நாட்டில் இப்போதும் வஞ்சி நகரம்  என்கிற ஊர் மதுரை - திருச்சி சாலையில் மேலூ ருக்கு அருகில் உள்ளது. இந்த பூவரசம் பூவின்  தாவரவியல் பெயர் தெஸ்பீஸியா பாப்புல்னியே  (thespesia populnea) என்பதாகும். இந்தப் பூ  மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.  வஞ்சி மலர் மலையாளத்தில் வஞ்சி என்றே  அழைக்கப்படுகிறது. நீருவஞ்சி என்று கன்ன டத்திலும் வஞ்சுலா என்று சமஸ்கிருதத்திலும் குறிப்பிடப்படுகிறது. வஞ்சி மலரை சூடி போர் தொடுத்தல் பழம்  தமிழர் மரபு. ஆனால் பாலஸ்தீனத்தில் எந்த  மரபின்படி குழந்தைகள், பெண்கள், முதிய வர்கள் என முஸ்லீம் மக்களை இனப்படு கொலை செய்கிறது இனவெறி இஸ்ரேல். பாலஸ்தீனர்களை வஞ்சிப்பது இஸ்ரேல் மட்டு மல்ல, அமெரிக்காவும் தான் என்பதே உண்மை.  ஆக்கிரமிப்பாளர்கள் எந்தப் பூவைச் சூடினால்  என்ன? அழிவு (ப்பு) தானே போரின் விளைவு.