அறநிலையத்துறையில் 1,500 பேருக்கு பணி நிரந்தரம்
சென்னை, செப். 25 - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சி யில் கோவில்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் விவரித்தார். அப்போது, திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் 3,707 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டு உள் ளதாகவும், அற நிலையத் துறை க்குச் சொந்தமான 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும், மேலும் 14,746 கோவில்களில் திருப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள தாகவும் தெரிவித்தார். மேலும், திருக்கோவில்களில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 2,500 பேர் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கூடுதலாக 1,500 தற்கா லிக பணியாளர்கள் நிரந்தரப் பணி யாளர்களாக மாற்றப்பட உள்ளதாக வும் அமைச்சர் சேகர்பாபு குறிப் பிட்டார்.