துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியின் ஏஜியன் கடல்பகுதியை மையமாக வைத்து நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் பதிவாகி உள்ளது. இதனால் துருக்கியில் இஸ்மிர் நகரில் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இஸ்மிர் நகரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தை தொடர்ந்து 196 முறை பின் அதிர்வுகள் பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில அதிர்வுகள் 4 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி உள்ளது-
இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.