tamilnadu

img

வெறி நாய் கடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

சேலம், ஏப்.19-சேலத்தில் வெறி நாய் கடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் வெள்ளியன்று காலை வெறிநாய்ஒன்று அப்பகுதியில் வந்த வயதானவர்கள், சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் உள்ளிட்ட30க்கும் மேற்பட்டோரை வெறித்தனமாக கடித்து குதறியது. காயமடைந்த வயதானோர் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் வெறிநாய் கடிக்கு மருந்து இருப்பு இல்லை என கூறி நாய் கடி பட்ட நபர்களை காத்திருக்கும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் மருத்துவமனை வாசலில் சுமார் ஒரு மணி நேரமாக காத்துக் கிடந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் நாய் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலை 8 மணிக்கு நாங்கள் நாய்க்கடிக்கு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். உரிய சிகிச்சை அளிக்காமல் மருந்து இல்லை, பவரான மருந்து இல்லை என கூறி எங்களை சுமார் இரண்டு மணி நேரமாக காக்க வைத்தனர் என்று கூறினார்.ஒரு வெறிநாய் 30க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;