tamilnadu

வெட்டுவானத்தில் சிறிய பாலம் அமைக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

வெட்டுவானத்தில் சிறிய பாலம் அமைக்க  ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

வேலூர், ஜூலை 28 – வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அம்பேத்கர் நகர் மக்கள் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம்  மனு அளித்தனர். அம்மனுவில் சுமார் 2500 குடும்பங்கள் எங்களது சுற்றுவட்டார கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெட்டுவானம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். எதிர்ப்பக்கம் உள்ள சுடுகாட்டிற்கு உடலை எடுத்து செல்வதில் சிரமம் உள்ளது. எனவே சிறிய மேம்பாலம் அமைத்து தந்து மக்கள் சாலையை எளிதில் கடக்க உதவி புரிய வேண்டும். ஏற்கனவே சாலையை கடக்க முயன்று 3 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு சிலர் கைகால்களை இழந்துள்ளனர் எனவே சிறிய மேம்பாலம் ஒன்றை அமைத்து சாலையை கடக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் பெரிய பாலம் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ளதால் சுற்றி வருவதில் சிரமம் உள்ளது ஆகவே எங்கள் பகுதியில் சிறிய பாலம் அமைத்துதர வேண்டுமென மனுவில் கூறியுள்ளனர்.