சென்னை:
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் மீது பழி சுமத்திய எடப்பாடி அரசு தற்போது கடவுள் மீது பழியை சுமத்த முயற்சிக்கிறது என திமுக., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் ‘‘கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குதான் தெரியும் என முதல்வர் கூறியது கண்டிக் கத்தக்கது.முதலில், மக்கள் மீது பழி சுமத்திய அரசு, தற்போது கடவுள் மீது பழியை சுமத்த முயற்சிக்கிறது. குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்திற்கு மேல் குற்றத்தை அரசு செய்கிறது.அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா என்ற செய்தியை அவரிடம் உறுதிபடுத்திய பிறகே, டுவிட்டரில் பதிவிட்டேன்.
அமைச்சருக்கு கொரோனா என மத்திய அமைச்சரும் டுவிட் செய்ததற்கு முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார். அமைச்சருக்கு தொற் றில்லை எனில் மகிழ்ச்சியே. ஆனால், முதல்வர் அதை மறைக்கிறார்.கொரோனா மறைந்தது என்ற செய்திதான் முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கி தரும். கொரோனாவை மறைப்பதோ, எண்ணிக் கையை குறைப்பதோ முதல்வருக்கு நல்ல பெயர் வாங்கி தராது.மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சொல்வதை கேட்டு பரிசீலித்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.