world

img

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்- எம்.ஏ.பேபி

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை சிபிஎம் வன்மையாக கண்டிப்பதாக அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதலை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். இது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை என்ற அமெரிக்க உளவுத்துறையைப் புறக்கணித்து இந்த தாக்குதலை டிரம்ப் உத்தரவிட்டார். ஈராக் போரில் போலி WMD கதைகளை சொன்னது போல, இப்போது அணு ஆயுதப் பொய்கள்.
இதனால் இந்திய உட்பட மற்ற நாடுகளும், பொருளாதாரம் மற்றும் அரசியல் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். இந்த தாக்குதல்களின் மூலம் அமெரிக்கா தன்னை மிகவும் மோசமான நாடு என்று நிரூபித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். என தெரிவித்துள்ளார்.