world

img

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஞாயிறன்று அதிகாலை ஈரான் 30க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரில் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியுள்ளது மத்தியக் கிழக்கில் போர் பதற்றங்களை அதிகரித்துள்ளது.