world

img

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: அமெரிக்காவுக்கு மீது விரைவில் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்காக கூறி, இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதை அடுத்து பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வார காலத்திற்கும் மேலாக ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலை பின்னால் இருந்து இயக்கிய அமெரிக்கா தற்போது நேரிடையாக போரில் ஈடுபடும் வகையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய மூன்று அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் வான் பரப்பை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடந்து அமெரிக்காவுக்கு தாமதம் இன்றி பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்துவோம் என என கோமேனியின் உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதாரி அறிவித்துள்ளார்.

இஸ்ரேலும், ஈரானும் போரிட்டு வந்த நிலையில், தற்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது போர் பதற்றங்களை மேலும் அதிகரித்துள்ளது.