லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
தருமபுரி, ஜூன் 21- பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுத லுக்காக விவசாயிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்ரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (40). இவர் பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஅள்ளி நகரில் கிராம நிர்வாக அலு வலராக பணியாற்றி வந்தார். அதேபகுதியைப் சேர்ந்த கணேசன் என்பவர், விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் தர வேண்டும், என பிரபு கூறியுள்ளார். ரூ.3 ஆயிரம் கொடுத்த நிலையில், மேலும் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்ய முடியும், என பிரபு கூறியதால் வேதனையடைந்த கணேசன், தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவ லகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் பணத்தை கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன், காவல் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் பிரபுவை பிடித்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக் குப்பதிவு செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட பிரபு, பணியின் போது மது போதையில் இருந்ததால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 மாதத்தில் பாலக்கோடு பகுதியில் 3 அரசு பணியாளர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசா ால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
நியாய விலைக்கடையில் பயோ மெட்ரிக் சரிவர செயல்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு
நாமக்கல், ஜூன் 21- நியாய விலைக்கடையில் பயோ மெட்ரிக் கருவிகள் சரிவர செயல்படாத தால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்தி ருந்து பொருட்களை வாங்கிச் செல் கின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் தாலுகாவின் பல்வேறு இடங்களில் ஏராளமான ரேசன் கடைகள் செயல் பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரர் களுக்கு மாதத்தின் முதல் தேதியிலி ருந்து ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளை யம் - சங்கிகிரி சாலை, ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதியில் செயல்படும் ரேசன் கடையில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாகவே குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை வைத்து ரேசன் பொருட்களை வாங்கிச் செல் லும் பயோ மெட்ரிக் கருவிகள் சரிவர வேலை செய்யாததால், ரேசன் பொருட் களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மேலும், ரேசன் பொருட்களை உரிய நேரத்தில் பெற முடியாததால் வயதான முதியவர்கள் மிகுந்த தவிப் புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், மாதத்தின் முதல் தேதி யிலிருந்து 10 ஆம் தேதிக்குள் அனைத்து விதமான ரேசன் பொருட்களும் வந்து விடும். இருந்தபோதிலும் அடிக்கடி பொருட்களை வாங்குவதற்காக கைரே கையை பதிவு செய்யும்போது, பயோ மெட்ரிக் கருவிகள் சரிவர வேலை செய் வதில்லை. அவ்வப்போது சர்வர் கோளாறும் ஏற்படுவதாகக்கூறி, கடை ஊழியர்கள் சில நாட்களுக்கு பிறகு வந்து வாங்கிக் கொள்ளவும், என ஒவ் வொரு நாளும் அலைகழிக்கின்றனர். மாதக்கடைசி வாரங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், ரேசன் பொருட்களை வாங்க வருகிறோம். அப் படி இருந்தும் கைரேகை பதிவு செய்ய முடியாததால் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை. கைரேகை விழாத பட்சத்தில் கருவிழி சென்சார் மூலமாக பொருட்களை பெறலாம் என் றாலும், முதியவர்கள் வந்தார் கருவிழி சென்சார் வேலை செய்வதில்லை. இதன் காரணமாக கூலி தொழிலாளர் களான நாங்கள் பல மணி நேரம் காத்தி ருந்தும் ரேசன் பொருட்களை பெற்றுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனைகளை தடுக் கும் வகையில் எளிய முறையில் ரேசன் பொருட்கள் பெற்று செல்லும் வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல் வேறு இடங்களிலும் இதே நிலை நீடிப்பதாகவே கூறப்படுகிறது. ரேசன் கடைக்கு பெரும்பாலும் வயதான வர்கள் வருகை தருவதால், அதற் கேற்ற வகையில் நடவடிக்கைகள் எடுத்து, தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க அரசு உதவ வேண்டும், என்ற னர். பல மணி நேரமாக காத்திருந்தும் ரேசன் பொருட்களை வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்கள், கடை ஊழிய ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்கிகளின் உதவியோடு, காட்டு யானையை விரட்ட வனத்துறை முயற்சி
றுத்தி வரும் காட்டு யானையை ஜம்போ, கிருஷ்ணன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பிதற் காடு சந்தக்குன்னு பகுதியில் கடந்த 8 ஆம் தேதி இரவு குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை தாக்கியதில் ஜோஸ் ஆண்டனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இதைத்தொடர்ந்து கிராமப்பகுதியில் உலா வரும் காட்டு யானையை விரட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமராக்கள் மூலம் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் காட்டு யானைகளை விரட்டும் பயிற்சி பெற்ற ஜம்போ, கிருஷ்ணன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை கொண்டு யானை விரட் டும் குழுவினர் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை கடந்த இரண்டு நாட்க ளாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வருவது குடியிருப்பு வாசிகளி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வனத்துறையினர் தொடர்ந்து நான்காவது நாளாக ட்ரோன் கேமராக்கள் மூலம் யானையின் நடமாட்டத்தை கண்கா ணித்து கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை தாக்குதல்
கோவை, ஜூன் 21– கோவை, வாளையாறு அருகே உள்ள மொடமாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வியாழனன்று இரவு அவரது பட்டியில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கிச் சென்றது. இதில் 2 ஆடுகள் உயிரிழந் தது. ஒரு ஆடு படுகாயங்களு டன் தப்பியது. இதுகுறித்து மதுக்கரை வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கவனித்து வரு கின்றனர்.
ஓட்டுநர் அலட்சியத்தால் அலறிய பயணி
கோவை, ஜூன் 21- ஓட்டுநரின் அலட்சியத் தால், அரசு பேருந்து கதவில் பயணி ஒருவரின் கால் மாட் டிக் கொண்டதால், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், காந்திபுரம் பேருந்து நிலை யத்திலிருந்து சூலூரை நோக்கி அரசு பேருந்து வியா ழனன்று சென்று கொண்டி ருந்தது. அப்போது, ஒண்டிப் புதூர் பகுதியில் பயணி களை பேருந்தில் ஏற்றிய பிறகு, ஓட்டுநரின் கவனக் குறைவால் ஒரு பயணியின் கால் பேருந்து கதவில் மாட் டிக்கொண்டது. இதைய டுத்து பயணியின் அலறல் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, அப் பயணி மீட்கப்பட்டார். அப் போது ஓட்டுநர், பேருந்தில் கதவு வேண்டாம் என 30 பேர் சேர்ந்து அரசாங்கத்திடம் எழுதி கொடுங்கள், என்று பயணிகளை ஆக்ரோஷ மாக திட்டினர். மேலும், ஓட்டு நர் மற்றும் நடத்துநரிடம், பய ணிகள் ஏறிய பிறகு கதவை மூட வேண்டும், என்று கூறி சக பயணிகள் வாக்குவாதத் தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.