கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு மறைக்க முயல்கிறது!
கோவை, ஜூன் 21- கீழடியில் கிடைத்த பொருட்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு நிகரானவை, ஆனால், ஒன்றிய பாஜக அரசு மேலும் ஆதாரங்களை கேட்டு, நமது தொன்மையை மறைக்க முயல்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற் றம் சாட்டினார். கோவை விமான நிலையத்தில் சனியன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செய லாளர் வைகோ செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆங்கில மொழி குறித்த கேள் விக்கு, “அவரது உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி; அதை அறிந்தால் உலகளவில் வளர முடியும். பேரறி ஞர் அண்ணா, தமிழ்நாட்டில் தமி ழும் ஆங்கிலமும் இருக்க வேண் டும் என்றார். பாஜகவும் ஆர்.எஸ். எஸ்-ம் இந்தியையும், சமஸ்கிரு தத்தையும் திணிக்க முயல்கின்றன. இதற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இந்தியாவை ‘பாரத்’ எனவும், தலைநகரை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு மாற்றவும், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமி யர்களுக்கு வாக்குரிமை மறுக்க வும், இந்தியையும் சமஸ்கிருதத் தையும் பரப்பவும் முயல்கிறது. இத் தகைய முயற்சிகளை பல மாநிலங் கள் ஏற்கவில்லை. இந்தி திணிப் புக்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருகி றது. 2017 இல் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றமில்லை என் றும், வேறு கட்சிகளுடன் இணைய வேண்டிய அவசியமில்லை என் றும் வைகோ திட்டவட்டமாக தெரி வித்தார். “ரகசியமாக பேசும் பழக் கம் எங்களுக்கு இல்லை”. தொடர்ந்து கீழடி அகழாய்வு குறித்து பேசிய வைகோ, “கிமு 700 முதல் கிபி 500 வரை கிடைத்த பொருள்கள் மொகஞ் சதாரோ, ஹரப்பாவுக்கு நிகரா னவை. இரும்பு உலோகம், வரிசை யான வீடுகள், சாக்கடை கால்வாய் கள் ஆகியவற்றுக்கான ஆதாரங் கள் கிடைத்துள்ளன. ஆனால், ஒன் றிய அரசு இதை மறைக்க முயல்கி றது. கீழடி தமிழர் மற்றும் திரா விட நாகரிகத்தின் சான்று. ஆரிய கலாச்சாரத்தை திணிக்க விரும்பு வதால் இதை ஏற்க மறுக்கின்ற னர்” என்றார்.