tamilnadu

img

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழிதடத்தில் நாள்தோறும் ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழிதடத்தில் நாள்தோறும் ரயில் சோதனை ஓட்டம்

சென்னை, ஆக. 20 சென்னை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையி லான மெட்ரோவழித்த டத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்ன தாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டம் கடந்த 16 ஆம்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சோதனை இரண்டு வாரங்கள் நீடிக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் இயக்கப் பட்டு வரும் மெட்ரோ ரயில்  சேவையால் கணிசமான மக்கள் பயன் அடைந்து வரு கிறார்கள். எனவே சென்னை யில் பல்வேறு இடங்களுக் கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் பணியானது நடை பெற்று வருகிறது. அந்த வகையில் அதிகமாக ஐடி ஊழியர்கள் பயன்பெறும் வழித்தடமாக போரூர் - பூந்த மல்லி வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து இந்தாண்டு இறுதியில் பொதுமக்களு க்கு திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாகவும், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் மற்றும்  வழித்தடங்களுக்கு பாது காப்பு சான்றிதழ்கள் பெறும் பணிகள் தொடங்கியுள்ளது.  இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு  வரையிலான வழித்தடத் தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்ன தாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை களைத் தொடங்கியுள்ளது. இந்தச் சோதனைகள் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடி வமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு மூலம் நடத்தப்படு கின்றன. மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான சான்றி தழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறை களின்படி இந்தச் சோத னைகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 16, 2025 முதல் இந்த சோதனைகள் தொடங்கப் பட்டுள்ளன. மேலும் அவை சுமார் இரண்டு வாரங்க ளுக்குத் தொடரும். இக்கால கட்டத்தில், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்படுகிறது. அத்துடன், வழித்தடத் தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல் திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்படு கிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், புதிய வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில்கள் பாது காப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும். மேலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்கு நர் மு.அ.சித்திக் முன்னிலை யில் பாதுகாப்புச் சான்றி தழ் சோதனைகள் நடை பெற்றன. இது தொடர்பாக சித்திக் கூறுகையில், ‘இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில், பாது காப்பு சான்றிதழுக்கான சோதனைகள் ஒரு முக்கிய  மைல்கல்லை எட்டியுள் ளதைக் குறிக்கிறது என்றார். பூந்தமல்லி புறவழிச் சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான இந்த வழித்தட பகுதியில் 90 கி-மீ வேகத்தில் சென்ற ரயில் 9 நிமிடங்களில் கடந்தது. பாது காப்பு மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த மீண்டும் நாங்கள் மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப் படுத்துகிறோம் என தெரி வித்தார்.