tamilnadu

img

தோழர் அய்யனார் மறைவுக்கு சிபிஐ அஞ்சலி

சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட முன்னணி தலைவர்களில் ஒருவரான தோழர் எம்.அய்யனார் மே 14 அன்று காலமானார். அவருக்கு வயது 72.இதுகுறித்துஅக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”ஆரம்ப காலத்தில் ஹோட்டல் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் அய்யனார். அந்தத் தொழிலில் உள்ள தொழிலாளர்களை அணி திரட்டி சங்கம் அமைத்து, அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தவர். பின்னர் படிப்படியாக பல பிரிவுத் தொழிலாளர்களிடம் நெருக்கமாக பழகிய பண்பாளர்.காலம் சென்ற தலைவர் தோழர் கே.டி.கே.தங்கமணி தொடங்கி இன்றைய மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன் வரையில் நெருங்கிய பழக்கம் கொண்டவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.மறைந்த அய்யனாருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

;