tamilnadu

img

பாஜக கூட்டணியிலிருந்து  அதிமுக வெளியே வர வேண்டும்

பாஜக கூட்டணியிலிருந்து  அதிமுக வெளியே வர வேண்டும்

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 27 - “அதிமுக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும். இல்லையெனில் தன் ஆக்டோபஸ் கரங்களால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலக் கட்சிகளை அழித்ததைப் போல் அதிமுகவையும் பாஜக அழித்துவிடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரித்தார்.

ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜுன் 25, 26 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறை வில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “ரயில் பயணிகளின் சலுகைகளைப் பறித்து பாஜக ஜூலை 1ஆம் தேதி  முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த  திட்டமிட்டுள்ளது. இது கண்ட னத்திற்குரியது. அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

அகில இந்திய பொது வேலைநிறுத்தம்

ஜூலை 9ஆம் தேதி பாஜக அரசைக் கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதற்கு சிபிஎம் முழு ஆதரவை தெரி வித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த அந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

டயாலிசிஸ் சிகிச்சையில்  தனியார் பங்களிப்பா?

தமிழக அரசு 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கும் அறிவிப்பு வர வேற்கத்தக்கது. ஆனால் அதை தனியார் பங்களிப்புடன் செயல் படுத்துவதை எதிர்க்கிறோம். அந்த முடிவை அரசு திரும்பப் பெற  வேண்டும். தமிழ்நாடு அரசே அந்த  சிகிச்சையை முழுமையாக மேற் கொள்ள வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

மொழி வளர்ச்சியில் பாரபட்சம்

ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக் கீட்டில் பாரபட்சம் காட்டுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டு மக்களைப் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறார்கள். மொழி அட்ட வணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தினார்.

அதிமுகவின் ஏமாற்றம்

திமுக கூட்டணியில் பிளவு வருமா, கட்சிகள் வெளியேறி தங்களுடன் இணையுமா என அதிமுக எதிர்பார்ப்பு டன் இருப்பதாகக் கூறிய அவர், “திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது என அதிமுக கூறுவது அந்த ஏமாற்றத்தின் விளைவாக வரும் கருத்து” என்றார். “எங்களின் போராட்டங்களை மாநில அரசு ஒடுக்கவில்லை. எங்கள் போராட்டங்களின் விளைவாகத்தான் அரசு ஊழியர் பிரச்சினை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பரிந்து ரையை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி

“பாஜக கூட்டணியில் அதிமுக மட்டுமே உள்ளது. மற்றவை எல்லாம் சிறு சிறு குழுக்கள்தான். அந்த கூட்டணியிலிருந்து கட்சிகளைப் பிரிக்க வேண்டும் என எந்த நிலையும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாகத்தான் உள்ளது” என்று குறிப்பிட்ட பெ.சண்முகம், “இந்தியா முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளை, பாஜக தன் ஆக்டோபஸ் கரங்களால் அழித்து விட்டது. அந்த நிலை அதிமுகவிற்கு வந்துவிடக்கூடாது என நாங்கள் நினைக்கிறோம். அதிமுக மதச்சார் பின்மையில் நம்பிக்கை உள்ள கட்சி. அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து அழிந்துவிடக்கூடாது என்கிற கவலை எங்களுக்கு உள்ளது. அந்த எச்சரிக்கையைத்தான் நாங்கள் திரும்ப திரும்பக் கூறி வருகிறோம்” என்று குறிப்பிட்டார். “அதிமுக-பாஜக கூட்டணி பொருந் தாத கூட்டணியாக உள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிற கோரிக்கையோடும், ரெய்டுக்கு பயந்தும்தான் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளார்கள்” என்றும் அவர் விமர்சித்தார். “சட்டம் - ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என கூறும் அளவிற்கு தமிழ் நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை இல்லை. கடந்த காலங்களைப் போல்  அல்லாமல் உடனுக்குடன் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிச் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.  (ந.நி.)